காதல் பனித்துளி

விரல்களும் நகங்களும்
தொட்டுக்கொண்ட
நேரங்கள்

எண்ணி அதை பார்த்ததில்லை
என்ன புது
நேரங்கள்

ஏதோ ஒரு
தென்றல் மோதி
மெல்ல மெல்ல
மாறினோம்

உன்னை நானும்
என்னை நீயும்
எங்கே என்று
தேடினோம்

நம்மை சுற்றி கூட்டம்
வந்தும் தனியானோம்

தனிமையில் நெஞ்சுக்குள்ளே
பேசலானோம்

முகத்திரை உள்ளே நின்று
கண்ணாமூச்சி ஆடினோம்

பொய்யால் ஒரு மாலை
கட்டி பூசை செய்து
சூடினாய்

நிழல்களின் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்

நீயாய் அதை சொல்வாய்
என நித்தமும் நான்
வாடினேன்

சொல்ல நினைத்தேன்
ஆனால் வார்த்தையில்லை

உன்னை விட்டால்
யாரும் எந்தன்
சொந்தம்மில்லை

சொந்தமென்று யாரும் இனி
தேவையில்லை

பின்னூட்டமொன்றை இடுக